வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுவன் தற்கொலை!

பத்து வயதுடைய பாடசாலை மாணவரொருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொகவந்தலாவ காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான காவல் பரிசோதகர் சம்பத் பண்டார தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 5ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது பெற்றோர் தொழிலுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில், குறித்த சிறுவன் கழிவறையில் நேற்று (11.06.2023) மாலை தமது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த சிறுவனின் இரண்டு சகோதரர்களும் குறித்த சந்தர்ப்பத்தில் வீட்டில் இருக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுவன் உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திக் ஓயா ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் ஹட்டன் நீதவானின் ஸ்தல பரிசோதனையின் பின்னர் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொகவந்தலாவ காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply