சற்று முன்னர் கிளிநொச்சியில் இடம்பெற்ற பாரிய விபத்து!

பளையில் சற்று முன்னர் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த பாரவூர்தி ஒன்றே விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சி – பளை, முல்லையடி பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பாரவூர்தி முல்லையடி பகுதியில் ஏ9வீதி் அருகே மின்சார கம்பத்துடன் மோதி அருகில் இருந்த வீட்டு மதில் மேல் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து சாரதி வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையால் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply