துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் – லொஹானுக்கு எதிராக நடவடிக்கை!

இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக கொலை முயற்சி குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டும் என தனிநபர் குழு பரிந்துரைத்துள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளை முழந்தளிடச் செய்து துப்பாக்கி முனையில் உயிர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பிலேயே இந்த பரிந்துரை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக இருந்த லொஹான் ரத்வத்த, கடந்த 2021 ஆம் ஆண்டு, அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று, அங்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் குழுவை வரவழைத்து, அவர்களை தன் மண்டியிடும்படி கட்டளையிட்டு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியிருந்தார்.

அதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி மேல்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் குசலா சரோஜினி வீரவர்த்தன தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையிலேயே குறித்த குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டும் என பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஆயுதம் தாங்கியவாறு சிறைச்சாலைகளிற்குள் அமைச்சர் நுழைவதற்கு அனுமதித்த சிறைக் காவலர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த குழு பரிந்துரைத்துள்ளது.

அவர், இழைத்த குற்றங்கள் தொடர்பில்  நம்பகதன்மை மிக்க ஆதாரங்கள் உள்ளமையால், சிறைச்சாலையில் ஆயுதங்களை பயன்படுத்தியமை, கொலை முயற்சி, உயிர் அச்சுறுத்தல் மற்றும் மக்கள் மத்தியில் அரசாங்கம் குறித்த விருப்பமின்மையை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் புரிந்துள்ளதாக குறித்த குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்துவதற்கு முன்னர்,  நண்பர்கள் குழுவினருடன், மது போதையில், தூக்கு மேடையை பார்வையிட்டதோடு, மாலை 6 மணிக்கு பின்னர், வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்குள் வலுக்கட்டாயமாக அவர் பிரவேசித்தார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply