எல்.பி.எல் ஏலம் நாளை..! 358 வீரர்கள் பங்கேற்பு

2023 ஆம் ஆண்டின் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் நாளை புதன்கிழமை (14) நடைபெறவுள்ள நிலையில் குறித்த ஏலத்தில் 358 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

எதிர்வரும் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை நடைபெறுவுள்ள லங்கா பிரீமியர் லீக் போட்டியில், ஐந்து அணிகளின் உரிமையாளர்கள் தங்கள் உரிமைகளை பிரதிநிதித்துவப்படுத்த வீரர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

இந்த ஆண்டுக்கான ஏலத்தில், உலகின் தலைசிறந்த வீரர்கள் சிலர் ஏலத்தில் விற்கப்பட உள்ளனர்.

இந்தியா வீரர் சுரேஷ் ரெய்னா, ஆஸ்திரேலியா வீரர்களான க்றிஸ் லீன் மற்றும் பென் கட்டின், தென்னாப்பிரிக்க வீரரான ரேசி வெண்ட டூசன், நியூசிலாந்து வீரர் கொலின் டி கிரண்ட்ஹோம் மாறும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான எவின் லூவிஸ் மற்றும் கார்லோஸ் பிராத்வைட் இந்த ஏலத்தில் விற்கப்பட உள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply