குறைக்கப்படுகிறது பாடசாலை உபகரணங்களின் விலை!

பாடசாலை உபகரணங்களின் விலைகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்துறை சங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த காலங்களில்  வலுவடைந்து வருவதால், இலங்கையில் பொருட்களின் விலைகள் ஓரளவு குறைய ஆரம்பித்துள்ளன.

அதனடிப்படையிலேயே தற்போது பாடசாலை உபகரணங்களின் விலைகளைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பயிற்சி புத்தகங்கள் மற்றும் காகித பொருட்கள் உட்பட அனைத்து பாடசாலை உபகரணங்களின் விலைகளையும் 20 வீதம் முதல் 25 வீதம் வரை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்துறை சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, முக்கியமான பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, வங்கி வட்டி வீதங்கள் குறைந்துள்ளமை காரணமாக இந்த பொருட்களின் விலை அடுத்த மாதத்தில் 35 வீதம் முதல் 40வீதம் வரை மேலும் குறையலாம் என அந்த சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply