இன்டர்போலின் சிவப்பு பட்டியலில் 7 இலங்கையர்கள்!

சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பின்(இன்டர்போல்) சமீபத்திய சிவப்பு பட்டியலில் இலங்கையர்கள் ஏழு பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஏழு பேரில், நான்கு இலங்கையர்கள் இலங்கையில் ‘தேடப்படுபவர்கள்’ என பட்டியலிடப்பட்டுள்ளதுடன் , மற்ற மூன்று இலங்கையர்கள் பிற நாடுகளில் செய்த குற்றங்கள் தொடர்பாக அந்நாடுகளால் செய்யப்பட்ட கோரிக்கைகளின் பேரில் சிவப்பு அறிவிப்பில் தேடப்படுபவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

38 வயதான கொஸ்கொட சுஜி எனப்படும் சொய்சா ஜகமுனி சுஜிவ, 49 வயதான நடராஜா சிவராஜா, 50 வயதான முனுசாமி தர்மசீலன் மற்றும் 35 வயதான விக்னராசா செல்வநாதன், 52 வயதான குமாரசுவாமி நவனீதன், 61 வயதான மொஹமட் பௌமி, 41 வயதான மாணிக்கவாசகர் விஜயராஜா ஆகியோர் இவ்வாறு தேடப்பட்டு வருவோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சர்வதேச குற்றவியல் பொலிஸின் சிவப்பு பட்டியலில் மொத்தமாக 6872 பேரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply