மஹர சிறைக்கலவரத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரிக்கை !

மஹர சிறைச்சாலையில் 2020 ஆம் ஆண்டு  இடம்பெற்ற கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, மோதலின் போது உயிரிழந்த கைதி ஒருவரின் மனைவி எம்.ஜி.லசந்தியால் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டதுடன் சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்யுமாறும் கோரப்பட்டிருந்தது.

மஹர சிறைச்சாலையில் உள்ள கைதிகள் கொவிட்-19 நோய்த்தொற்றுகளின் அதிகரிப்புக் காரணமாக , முன்கூட்டியே பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் சிறந்த வசதிகளைக் கோரியும் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

அதன் போது, குறைந்தது எட்டு கைதிகள் கொல்லப்பட்டதுடன் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர் என்பதையும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply