வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பணமோசடி!

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்று தருவதாக கூறி, மக்களிடம் இருந்து 820,000ரூபாய் பணத்தை மோசடி செய்த தம்பதியர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரம்புக்கன பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான குறித்த தம்பதியருக்கு எதிராக பதிவாகியுள்ள 06 முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதை அடுத்து குறித்த தம்பதியினர் கேகாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களிடம் இருந்தும் குறித்த தம்பதியினர் பணத்தை மோசடி செய்துள்ளதாக மேலதிக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக 46 பேர் முறைப்பாடு செய்ய முன்வந்துள்ளதுடன், இவர்களால் ஏமாற்றப்பட்ட வேறு நபர்கள் இருந்தால் அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் இன்று கேகாலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply