வடக்கு கிழக்கு நில அபகரிப்பிற்கு விதுர விக்ரமநாயக்கவே காரணம்!

வடக்கு கிழக்கு தமிழர் நிலங்கள், அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் பணிப்புரைக்கமையவே அபகரிக்கப்படுவதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அமைச்சரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவி விலக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, வடக்கு கிழக்குக்கு பாரிய இராணுவப் பட்டாளங்களோடு சென்று வருகிறார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். சாவகச்சேரியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

கடந்த சில தினங்களாக தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் மானதுங்க பதவி விலகல் செய்தமை தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

ஜனாதிபதி எங்களோடு நடத்திய பேச்சு வார்த்தையிலும் கூட, அமைச்சரவை தீர்மானங்களை நிறைவேற்றுவதில் விருப்பம் இல்லாதவர் போல பேராசிரியர் மானதுங்க காட்டிக்கொண்டார்.

அது அமைச்சரவைக்கும் அவருக்குமுள்ள பிரச்சினை. எங்களுக்குள்ள பிரச்சினை, வடக்கு கிழக்கு வாழ் மக்களின் நிலங்கள் அபகரிப்பு தொடர்பானது எனவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply