ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிய 21 வயது இளைஞன் தற்கொலை!

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிய இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் கீரி அண்ணா வீதி பகுதியில் கடந்த திங்கட்கிழமை (12) காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதே பகுதியை சேர்ந்த பொடிமாத்தையா சந்திரசேன அனச்ராஜ் 21 வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.

அவரை அதிலிருந்து மீட்டெடுப்பதற்காக அவரின் குடும்பத்தார் எடுத்த முயற்சி பயனளிக்காத நிலையில் தற்கொலை செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply