மாலியில் பேருந்து விபத்து – 15 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் கால்நடைகளை ஏற்றிக் கொண்டு சென்ற லொறி மீது, இரண்டு பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று காலை, மாலியின் தலைநகர் பமாக்கோவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லொறி சென்றுகொண்டிருந்த போது, எதிரே வந்த பேருந்து லொறியை மோதித் தள்ளியது.

அதனை தொடர்ந்து, பின்னால் வந்த மற்றொரு பேருந்தும் மோதுண்டு விபத்தில் சிக்கியது.

குறித்த விபத்தில் பேருந்துகளில் பயணித்த 15 பேர் இறந்துள்ளதோடு, 32 பேருக்கும் மேற்பட்டோர், காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த விபத்தில் லொறியில் இருந்த கால்நடைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply