தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

இந்நிலையில் பரீட்சை குறித்த விண்ணப்பம், இன்று முதல் எதிர்வரும் ஜூலை 6 ஆம் திகதி  நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும், இணைய தளத்தின் ஊடாக மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு எந்த சூழ்நிலையிலும் நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகளை  Exam Information Centre என்னும் இணையதளத்தினூடாகப் பார்வையிடலாம்.

சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கான விண்ணப்பங்களை எவ்வாறு சமர்ப்பிப்பது? என்பது தொடர்பான விடயங்கள் தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை அறிவுறுத்தல் கையேடு வழங்கியுள்ளது என்று ஜெயசுந்தர தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply