கடற்படை அதிகாரி கப்பலில் தூக்கிட்டு தற்கொலை!

இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பலான விஜயபாகுவில் கடமையாற்றிவந்த அதிகாரி ஒருவர், அதே கப்பலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்று நேற்று(14) இடம்பெற்றுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் குறித்த கப்பல் தரிந்திருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக துறைமுக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, உயிரிழந்தவர் 44 வயதுடைய கொமாண்டோ தர அதிகாரி ஒருவரென என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த அதிகாரி உயிரை மாய்த்தமைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் துறைமுக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply