மட்டக்களப்பில் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் நேற்றய தினம் இடம்பெற்ற விபத்தில் 45 வயதுடைய பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த பெண் ஓட்டமாவடி – காவத்தமுனை பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயான முகைதீன் பாவா சித்தியா என்பது தெரியவந்துள்ளது.

குறித்த பெண் பாதசாரி கடவையை கடக்கும் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிளில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பான ஏறாவூர் பிரதேச மரண விசாரணை அதிகாரியின் விசாரணைகளை அடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய நபர் மதுபோதையுடன் காணப்பட்டதோடு, காயங்களுடன் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஏறாவூர் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply