பாஸ்போட் வரிசையில் இடம் பிடித்துக் கொடுத்தவர்கள் கைது.

வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக நேற்று காலை, 5000 ரூபாய்களைப் பெற்றுக்கொண்டு, பாஸ்போட் வரிசையில் இடம் பிடித்துக் கொடுத்தனர் என்னும் சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

பிராந்திய காரியாலயம் முன்பாக வரிசையில் இடத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு 5000 ரூபாயும், வரிசையின்றி உரிய நடைமுறைகளுக்கு அப்பால் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க 25 ஆயிரம் ரூபாயும் இடைத் தரகர்களால் பெறப்படுவதாக பொதுமக்களிடமிருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

குறித்த செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில், முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 5 நபர்களை பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேகநார்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply