க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து வெளியான விசேட அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை குறிப்பிட்ட ஏதேனும் ஒரு மாதத்தில் நடத்துவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி காரியாலயத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை நடத்துவதற்காக சட்ட ரீதியாக ஒரு மாதத்தை நிர்ணயம் செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உயர்தரப் பரீட்சை நடத்துவது குறித்து நாடாளுமன்றிற்கு அறிவித்து அனுமதி பெற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, அதி விசேட சந்தர்ப்பங்களைத் தவிர வேறு எந்த சந்தர்ப்பத்திற்காகவும் பரீட்சை மாதத்தை மாற்றாதிருப்பதற்கான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply