பாஸ்டர் ஜெரோம் மீது விசாரணை முன்னெடுப்பு

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக பண மோசடிச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

தம்மை கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷமிந்த விக்ரம இதனை நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இந்த ரிட் மனு, நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரச சட்டத்தரணி, இந்த பூர்வாங்க ஆட்சேபனைகளை முன்வைத்து, உரிய மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply