ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான திகதிகள் அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடத்தப்படும் திகதிகள் ஆசிய கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் செப்டம்பர் 17ஆம் திகதி வரை இந்த போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

இதில், 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், 9 போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்,பங்களாதேஷ், நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இதேவேளை, இந்தத் தொடரில் மொத்தமாக 13 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply