தெற்கு பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம்

தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா அருகே 7.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கமானது இன்று காலை பதிவாகியுள்ளது.

டோங்காவிற்கு தென்மேற்கே 280 கிலோமீற்றர் தொலைவில், 167.4 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் தோன்றியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை, பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அலாஸ்காவிற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

அவ்வாறே, அவுஸ்திரேலியாவிற்கும் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அவுஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலநடுக்கவியல் மையமானது,  ஃபிஜி தீவுகளின் தெற்குப் பகுதிக்கு அருகே நிலநடுக்கம் 7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply