ராஜபக்ஷர்கள் கூண்டோடு அழிந்து விட்டார்கள் என எவரும் கனவு காணாதீர்கள்!

ராஜபக்சக்கள் ஆரம்பித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னமும் வீரியத்துடன் உள்ளது எனவும், இந்த ஆட்சியின் பிரதான பங்காளர்கள் மொட்டுக் கட்சியினர் என்பதை எவரும் மறக்கக்கூடாது எனவும் பசில் ராஜபக்ச கடுமையான தொனியில் தெரிவித்துள்ளார்.

தேர்தல்களை எதிர்கொள்ளத் துணிவில்லாதவர்கள் மொட்டுக் கட்சி, மக்கள் ஆணையை இழந்துவிட்டது என்று பிதற்றுகின்றார்கள்.

அவர்களுக்குக் கடந்த தேர்தல்களில் மக்கள் எப்படிப் பாடம் புகட்டினார்கள் என்பது தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ராஜபக்சக்கள் கூண்டோடு வீழ்ந்து விட்டார்கள் என்று எவரும் கனவு காணக்கூடாது.

இந்த ஆட்சியை நிறுவிய ராஜபக்சக்கள் பதவிகளை மாத்திரமே துறந்துள்ளார்கள் ஆனால் இந்த ஆட்சியின் பிரதாக பங்காளர்களாகத் தொடர்ந்தும் இருக்கின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி ஆசனத்தில் மொட்டுக் கட்சியே அமர்த்தியது.

ஜனாதிபதியிடம் அமைச்சுப் பதவி கேட்டு வாக்குவாதம் செய்ய வேண்டிய அவசியம் எமக்கு இல்லை.

ஜனாதிபதி நன்றி மறந்து செயற்பட மாட்டார் என்றும் நாம் நம்புகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply