யூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு

உலகின் பிரபல சமூகவலைதளமான யூடியூப் சேனல்,ஒருவரது  யூடியூப் சேனலில் இனிவரும் காலங்களில் 500 சந்தாதாரர்கள்(Subscribers) இருந்தாலே எளிதாக பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பினை விடுத்துள்ளது.

அந்தவகையில் யூடியூப் இல் 1000 சந்தாதாரர்கள் மற்றும் 4000 பார்வை நேரங்கள் இருந்தால் மட்டுமே பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை காணப்பட்டது.

தற்போது, 500 சந்ததாரர்கள் இருந்தாலே பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பு தொடர்பில், யூடியூப் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

குறித்த வசதி தற்போது அமெரிக்கா, பிரித்தானியா, தாய்வான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய நாடுகளில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply