தூக்கில் தொங்கிய நிலையில் யாழ் மாணவனின் உடல் மீட்பு!

மாணவர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவர் ஒருவரின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊர்காவற்துறை நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவனாக கல்விகற்ற, 23 வயதான விக்னேஸ்வரன் அபிநஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தினால் வாடகை அடிப்படையில் விடப்படும் பொரலஸ்கமுவ கட்டுவல பிரதேசத்தில் காணப்படும் மாணவர் விடுதியிலேயே தூக்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விடுதியில் உறங்கிக் கொண்டிருந்த மாணவர் ஒருவர் இன்று அதிகாலை 4:30 மணியளவில் எழும்பி வெளியே வரும்போது இதனை கண்டு அச்சமடைந்து விடுதியிலிருந்தவர்களுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு விரைந்த மஹரகம மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை ஆரம்பித்ததுடன் நுகேகொட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகளாலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் , மஹரகம பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகரின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply