போதையில் மனைவியுடன் முரண்பாடு! மருமகனை மண்வெட்டியால் தாக்கி கொன்ற மாமனார்

மின்னேரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரொடவெதி பிரதேசத்தில் நபரொருவர் மனைவியின் தந்தையால் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 32 வயதுடைய மின்னேரிய, ரொடவெதி பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, உயிரிழந்தவர் நேற்று வெள்ளிக்கிழமை (16) இரவு மதுபானம் அருந்தி விட்டு தனது மனைவியுடன் முரண்பட்டுள்ளார்.

இதன் காரணமாக மனைவியின் தந்தை குறித்த நபரை மண்வெட்டியால் தாக்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மின்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply