உயர்தர மேலதிக வகுப்புக்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை

உயர்தர மேலதிக வகுப்புக்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தொிவித்துள்ளாா்.

உயர்தர மேலதிகவகுப்புகளில் அறவிடப்படும் கட்டணம், அந்த வகுப்புகளில் வௌியிடப்படும் விடயங்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஒழுங்குமுறையை மேற்கொள்ள எதிா்பாா்ப்பதாக அவர் கூறினார்.

ஊடக சந்திப்பொன்றில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இவ்வருட உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவா்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படுவார்கள் எனவும் இராஜாங்க சுரேன் ராகவன் மேலும் தெரிவித்துள்ளாா்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply