இருமடங்காக அதிகரிக்கின்றது அதிர்ஷ்ட இலாப சீட்டுகளின் விலை!

அதிர்ஷ்ட இலாப சீட்டுகளின் விலையை அதிகரிப்பதற்கு திறைசேரியின் அனுமதி கிடைத்துள்ளதாக தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, அதிர்ஷ்ட இலாப சீட்டின் விலை 40 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அதிர்ஷ்ட இலாப சீட்டு ஒன்றின் விலை 20 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதுடன், அதன் விலை இருமடங்காக அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன், அதிர்ஷ்ட இலாபசீட்டுக்களில் வழங்கப்படும் பரிசு தொகையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய லொத்தர் சபை குறிப்பிட்டுள்ளது.

விலை அதிகரிப்பு அமுலுக்கு வரும் திகதி தொடர்பில் இந்த வாரத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply