இலங்கையின் முதல் தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் காலமானார்!

இலங்கையின் முதல் தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி, யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி சாந்தா அபிமன்னசிங்கம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு (வயது -77) காலமானார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வட மாகாணத்திற்கான தலைவராகவும் சாந்தா அபிமன்னசிங்கம் செயற்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் நீண்டகால தலைவியாக இருந்த அவர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நீதிமன்றங்களின் மேம்படுத்தல்களிலும் சட்டத்தரணிகளின் நலன்களிலும் அக்கறையுடன் செயற்பட்டார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் மற்றும் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று திங்கட்கிழமை (19) முற்பகல் 11 மணியளில் அவரது உடுவில் இல்லத்தில் இடம்பெறும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply