கொடூர தீவிரவாத தாக்குதலை கண்டித்து காஷ்மீரில் மெழுகுவர்த்தி ஊர்வலம்!

தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மற்றும் புல்வாமா ஆகிய இரட்டை மாவட்டங்களில் மெழுகுவர்த்தி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.

வன்முறைக்கு எதிரான ஒற்றுமை மற்றும் எதிர்ப்பின் சக்திவாய்ந்த காட்சியாக, இது பார்க்கப்பட்டதாகவுமட அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

பாஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உதம்பூரைச் சேர்ந்த தீபு ஷர்மா, என்பவர் கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் இந்த அணிவகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனந்த்நாக் மற்றும் புல்வாமாவில் உள்ள முக்கிய இடங்களில் சிவில் சமூகத்தைச் சேர்ந்த கணிசமான எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் தங்களின் கூட்டு எதிர்ப்பின் அடையாளமாக பதாகைகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏந்திச் சென்றனர்.

அர்த்தமற்ற உயிர் இழப்பு குறித்து பங்கேற்பாளர்கள் தங்கள் வருத்தத்தையும் சீற்றத்தையும் வெளிப்படுத்தியதால், அமைதியான சூழல் சோகத்தால் நிரம்பியது.

தெற்கு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் சாகச விளையாட்டு குழுவில் பணிபுரிந்து வந்த தீபு சர்மா, பயங்கரவாதிகளால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது அகால மரணம் குறித்த செய்தி சமூகம் மற்றும் அதற்கு அப்பாலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

உள்ளூர் மக்கள்; குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைக்காக குரல் கொடுத்ததோடு இந்த மன்னிக்க முடியாத குற்றத்திற்கு காரணமானவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply