பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விநியோகம்!

கல்வி கற்கும் மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் வழங்கி வந்ததாக கூறப்படும் ஹொரணை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து நூறு மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரணை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் ஹொரணை தெல்கஹ கொடல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் ஹொரணை நகரிலுள்ள பயிற்சி வகுப்புகளுக்கு வரும் மாணவர்களுக்கே இவ்வாறு போதைப் பொருட்களை விற்பனை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக ஹொரணை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply