355 ஓட்டங்களை குவித்த இலங்கை!

உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தகுதிகாண் போட்டிகள் நேற்று ஆரம்பமான நிலையில் இலங்கை அணி இன்று தனது முதலாவது போட்டியில் விளையாடுகின்றது.

ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிராக நடைபெறம் இந்த போட்டி புலவாயோவில் இலங்கை நேரப்படி மதியம் 12.30 மணிக்கு ஆரம்பமானது

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு இராச்சிய அணி தலைவர் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.

இதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 355 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில், அதிகபடியாக குசல் மெண்டிஸ் 78 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 73 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் அலி நசீர் 44 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், ஐக்கிய அரபு இராச்சிய அணி 356 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாட தயாராக உள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply