பொதுநலவாய செயலாளர் – ரணில் விக்ரமசிங்க முக்கிய சந்திப்பு!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாந்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க, பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, பொதுநலவாய அமைப்பினுள் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்கள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தனது உத்திகளை பகிர்ந்து கொண்ட ரணில் விக்ரமசிங்க, இந்த முயற்சிகளில் பொதுநலவாய நாடுகளின் ஈடுபாடு குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply