பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு

கண்டி பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் மயக்க மருந்து வழங்கப்பட்ட இரண்டரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

கடந்த மாதம் 23 ஆம் திகதி காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு, சத்திரசிகிச்சைக்காக மயக்கமருந்து செலுத்தப்பட்டது.

மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாலே தனது குழந்தை உயிரிழந்ததாக குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னதாக இரண்டு தடவைகள் பேராதனை போதனா வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவரும் மற்றுமொரு பெண்ணும் இவ்வாறு உயிரிழந்திருந்தனர்.

இதனையடுத்து, வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை உரிய முறையில் கண்காணிக்க வேண்டும் என அரச மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply