யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைக்கு அழைப்பு

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யாழ்ப்பாண பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்ட நபர் ஒருவரை அச்சுறுத்தியதாக கிடைக்கப்பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் 22 ஆம் திகதி மதியம் 12 மணிக்கு யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு சமூகமளிக்குமாறு மனித உரிமை ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply