இராணுவ உயர் அதிகாரிக்கு அதிகளவான வாகனப் பாதுகாப்பு – நாடாளுமன்றில் தொடுக்கப்பட்ட கேள்விக்கணை!

இலங்கை இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கு ஏழு வாகனங்களை அணிவகுப்புக்கு அழைத்துச் செல்ல பணம் ஒதுக்கியது யார் என நாடாளுமன்றில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

உயர் இராணுவ அதிகாரி ஒருவரின் வாகனத்துடன் ஏழு வாகனங்கள் பாதுகாப்பிற்காக சென்றமை தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி கேள்வியெழுப்பியுள்ளார்.

மூன்று மாதங்களாக முதியோருக்கான உதவித்தொகை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை என்பன வழங்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில், இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கு ஏழு வாகனங்கள் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருப்பதற்கு யார் பணம் ஒதுக்கியது என கேள்வியெழுப்பியுள்ளார்.

அதுமட்டுமன்றி மக்கள் உணவு கிடைக்காமல் துன்பங்களை எதிர்நோக்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் உயர் அதிகாரிகளுக்கு இதுபோன்று அதிகளவு பணத்தை செலவழிப்பது சரியா என்றும் அவர் நாடாளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply