சுயாதீனமாக நடந்துகொள்ளாத சுயாதீன ஆணைக்குழு அதிகாரிகள்!

இலங்கையில் பல்வேறு ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்ட போதிலும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு நியமிக்கப்பட்ட சில அதிகாரிகள் சுயாதீனமாக நடந்து கொள்ளவில்லை என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.

நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

சுயாதீன ஆணைக்குழு சபை  மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.

மேலும் விதிகளை தீர்மானிப்பது மட்டுமல்லாது, விதிகளை நடைமுறைப்படுத்துவதே முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட அலுவலகத்தின் கருத்துரு நல்லதாக இருந்தாலும், எதிர்காலத்தில் அந்த அலுவலகத்தின் சுதந்திரத்தை சீர்குலைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் உள்ள தலைவர்களும் அரசியல் கலாசாரமும் செயற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply