இசை நிகழ்ச்சிகளை முடிப்பதற்கான நேர வரம்புகளில் மாற்றம்! உச்ச நீதிமன்றம் உத்தரவு

இலங்கை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இசை நிகழ்ச்சிகளை முடிப்பதற்கான கால வரம்பு திருத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அடிப்படை உரிமைகள் வழக்கில் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின்படி காலக்கெடு மாற்றப்பட்டுள்ளதாக அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, திருத்தப்பட்ட காலக்கெடு பின்வருமாறு,

வெள்ளிகிழமை மற்றும் சனிக்கிழமைகளில் – நள்ளிரவு 1 மணிவரையும், ஞாயிற்றுகிழமை – நள்ளிரவு 12.30 மணிவரையும்.

எவ்வாறாயினும், இசை நிகழ்ச்சிகள் மருத்துவமனைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு இடையில் நியாயமான இடைவெளியை பேண வேண்டும் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply