வன்னியின் புத்தகப் பண்பாட்டுத் திருவிழா – இலவச அனுமதி!

வவுனியாவில் 2023 ஆம் ஆண்டுக்கான வன்னியின் புத்தகப் பண்பாட்டுத் திருவிழா இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வு வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் இடம்பெறவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழிவின்போது, புத்தக விற்பனைக் கூடங்கள், சிறுவர்களுக்கான கதை சொல்லல் நிகழ்வுகள், புத்தக வாசிப்பு அனுபவப் பகிர்வுகள், நூல் அறிமுக நிகழ்வுகள் மற்றும் உரையாடல்களும் இடம்பெறவுள்ளது.

அதேவேளை, வவுனியா சுயாதீன தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில், பனை உற்பத்திக் கூடங்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் என்பனவும் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்விற்கான அனுமதி இலவசமாக வழங்குவதோடு, அனைவரையும் வருகைதருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply