பொரளையில் இன்று காலை துப்பாக்கிச் சூடு !

பொரளை குறுக்கு வீதி பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றுக்கு அருகில் இன்று காலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்திற்கு வந்த இனந்தெரியாத நபர்கள், T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி வீட்டின் வாயிலை நோக்கி இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீடு பிரபல காலணி நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குனருக்கு சொந்தமானது என பொலிஸார் தெரிவித்ததுடன், குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தொடர்பாக மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply