விபத்தில் ஆசிரியர் பலி – அடித்து நொருக்கப்பட்ட பேருந்து!

கொலன்னாவ ரஜமஹா விஹாரைக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் தனது மகளை குப்பியாவத்தை பாடசாலைக்கு அழைத்து செல்வதற்காக மெகொட கொலன்னாவையிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்தபோது, கொலன்னாவ ரஜமஹா விஹாரைக்கு அருகில் அதே திசையில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென இடதுபுறம் திரும்பியதில் மோட்டார் சைக்கிள் சுமார் ஐம்பது மீற்றர் வரை இழுத்துச் செல்லப்பட்டு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொலன்னாவ பகுதியை சேர்ந்த 37 வயதுடைய ஆசிரியர் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், 7 வயதுடைய அவரது மகள் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை , ஆத்திரமடைந்த பிரதேசவாசிகளால், குறித்த பேருந்தும் அதன் சாரதியும் தாக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பு கருதி பேருந்து முல்லேரியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்  சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply