நெற்செய்கையைத் தாக்கும் பன்றி நெல் தொடர்பில் தெளிவூட்டும் நிகழ்வு

யாழ்ப்பாணம் அளவெட்டியில் பன்றி நெல் என்னும் களையின் தாக்கம் தொடர்பில் தெளிவூட்டும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அளவெட்டி பினாக்கை பகுதியில், நெற்செய்கையில் தாக்கத்தை விளைவிக்கும் பன்றி நெல் எனும் களையின் தாக்கம் தொடர்பாக விவசாயிகளுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

பினாக்கை வயல் வெளிப் பகுதியில் வைத்தே நெற் செய்கையாளர்களுக்கு பன்றி நெல் களையினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக விளக்க உரைகள் வழங்கப்பட்டன.

இந்த தெளிவூட்டும் நிகழ்வில் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அஞ்சனாதேவி சிறிரங்கன் மற்றும் விவசாயப் போதனா ஆசிரியர்கள், அளவெட்டிப் பகுதியைச் சேர்ந்த நெற் செய்கையாளர்கள் என்போர் கலந்து கொண்டிருந்தனர்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply