நடுக்கடலில் பிடிபட்ட அகதிகள் கப்பல்

பிரித்தானியாவுக்கு அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற மீன்பிடிப் படகு ஒன்றை பிரான்ஸ் கடற்படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 54 அகதிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த மீன்பிடிப் படகே இவ்வாறு பிடிபட்டுள்ளது.

குறித்த படகில் பயணித்த அனைவரையும் பிரான்ஸ் கடற்படையினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, கரைக்கு அழைத்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களை ஏற்றிச் சென்ற இருவரை பொலிஸார் கைது செய்ததோடு, படகில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply