மலையகத்தில் சரக்கு ரயில் தடம் புரள்வு

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயில் தலவாக்கலை மற்றும் வடகொட புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டது.

குறித்த சம்பவம் இன்று காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதனால், மலையகப் பாதையினூடான ரயில் சேவைகள் தாமதமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, தற்காலிக நடவடிக்கையாக, குறித்த ரயில் நிலையங்களுக்கு பேருந்துச் சேவை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே ரயில் பாதையை புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply