பெண் போன்று நடித்து மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர்

பேஸ்புக்கில் தான் ஒரு பெண் எனக் கூறி, 14 வயது மாணவனை கம்பஹா பிரதேசத்திற்கு வரவழைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கு தொடர்பில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர், ருவன்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் எனவும், பெண் வேடமிட்டு பேஸ்புக்கில் நடித்த குறித்த சந்தேக நபர், கம்பஹாவிற்கு அழைத்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவனின் தந்தை கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, மாணவனிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு, கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply