பாடசாலை மாணவிக்கு நடந்த கொடூரம்!

கொழும்பில் உள்ள பிரபல மகளிர் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி ஒருவர் 8 தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட மாணவியின் நடத்தையில் மாற்றங்களை அவதானித்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் சிறுமியை வெல்லம்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து, சிறுமியை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, ​​சிறுமி 8 தடவைகள் பாரிய பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த சிறுமியின் உடலின் சில பாகங்களில் சிகரட்டினால் சுடப்பட்ட தீக்காயங்களை கண்டறிந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமியை சிறுவர் வைத்தியசாலையில் அனுமதித்து, தாயின் பராமரிப்புடன் மேலதிக சிகிச்சை வழங்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்களை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply