சோகத்தில் முடிந்த கதிர்காம யாத்திரை!

பொத்துவில் உகந்த முருகன் ஆலயத்தில் இருந்து கதிர்காமத்துக்கு காட்டுவழியாக பாத யாத்திரை சென்ற நபர் ஒருவர் பாம்பு தீண்டி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

குமுக்கன் வனப்பூங்கா பகுதியில் வைத்து பாம்பு தீண்டியதில் மயக்கமடைந்த குறித்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதை அடுத்து அவர் உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர், தம்பிலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய லிங்கசாமி கேதீஸ்வரன் என தெரியவந்துள்ளது.

சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதை அடுத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply