பந்து வீச்சாளா் ஒருவருக்கு தற்காலிகத் தடை விதித்தது ஐ.சி.சி!

சந்தேகத்திற்குரிய பந்துவீச்சு பாணி காரணமாக அமெரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் பிலிப்ஸுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை(ஐ.சி.சி) தற்காலிகத் தடை விதித்துள்ளது.

உலகக் கிண்ண ஒருநாள் போட்டிக்கான தகுதிச் சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் கைல் பிலிப்பின் பந்து வீச்சு பாணி சந்கேத்திற்கு உாிய வகையில் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

அந்த போட்டியில் அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

26 வயதான கைல் பிலிப் அமெரிக்க அணியை பிரதிநிதித்துவப்படுத்தி 5 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply