உயர்தர பரீட்சை வினாத்தாள்களின் மதிப்பீடு மேலும் தாமதமாகலாம்

2022 ஆம் ஆண்டுக்கான G.C.E உயர்தர பரீட்சை வினாத்தாள்களின் மதிப்பீடு மேலும் தாமதமாவதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக, கண்டி மகளிர் உயர்தரப் பாடசாலையின் பரீட்சார்த்திகள் நேற்றைய தினம் தமது கடமைகளில் இருந்து விலகியிருந்தனர்.

ஆகவே ஆசிரியர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை நிவர்த்தி செய்து, இந்தச் சிக்கலைத் தீர்க்க அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply