உதவித்திட்ட கொடுப்பனவில் முறைகேடு – போராட்டத்திற்கு தயாரான மக்கள்!

நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து வவுனியா பாரதிபுரம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றை முன்னெடுப்பதற்கு தயாராகியிருந்தனர்.

உதவித்திட்ட கொடுப்பனவு பெயர்ப்பட்டியலில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தே போராட்டம் மேற்கொள்வதற்குத் திட்டமிட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் வவுனியா பாரதிபுரத்தில் விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உள்ளிட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து, கிராம அபிவிருத்தி சங்க வளாகத்தில் ஒன்றுகூடி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முற்பட்டனர்.

அதன் போது வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டம் முன்னெடுப்பதற்கு தயாராக இருந்த மக்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினரால் பிரதேச செயலாளருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் பெயர் விபரம் வராதவர்களிள் முறைப்பாட்டு கடிதங்களை எழுதி பிரதேச செயலாளரிடம் கையளிப்பதுடன் தன்னிடமும் பிரதியொன்றை தருமாறு தெரிவித்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் கலைந்துசென்றிருந்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply