தாயை உள்ளே வைத்து வீட்டை கொளுத்திய யுவதி தவறான முடிவெடுத்து மரணம்!

காலி மாவட்டம், கரந்தெனிய பிரதேசத்தில் தனது தாயாருடன் வசித்து வந்த இளம் யுவதி ஒருவர் நேற்று இரவு தமது வீட்டைத் தீயிட்டுக் கொளுத்திய பின்னர் தவறான முடிவெடுத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி 22 வயதுடையவர் என்பதும் அவருடைய பெயர் ரி.ஜே.மாளவிகா என்பதும் தெரியவந்துள்ளது.

தாயார் வீட்டுக்குள் இருந்த நிலையிலேயே குறித்த யுவதி வீட்டைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டுத் தலைமறைவாகியுள்ள நிலையில் கொளுத்தப்பட்ட வீட்டுக்குள் சிக்கியிருந்த தாயார் காயங்கள் எதுவுமின்றி வெளியில் வந்து அயலவர்களின் உதவியைக் கோரியுள்ளார்.

அயலவர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டதை அடுத்து காணாமல்போன மகளைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போது வீட்டுக்கு அருகில் உள்ள பாழடைந்த வீடொன்றில் தவறான முடிவெடுத்த நிலையில் குறித்த யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததுடன், கடந்த நான்கு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்திருந்ததாகவும் யுவதியின் தாயார் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply