காலி முகத்திடலில் வைத்து கடத்தப்பட்ட இளைஞன் – சந்தேக நபர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு!

கொழும்பில் இளைஞர் ஒருவரை கடத்தி கப்பம் கோர முற்பட்ட நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்களை கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் முற்படுத்திய போதே எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொழும்பு – காலிமுகத்திடலில் நபர் ஒருவரைக் கடத்திச் சென்று தாக்குதல் நடத்திப் பணம் கோரிய சம்பவம் தொடர்பில் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவர், பக்கமுன பகுதியைச் சேர்ந்த ஒருவரை கடந்த 21 ஆம் திகதி கடத்திச் சென்ற நிலையிலேயே உறவினர்களிடம் கப்பம் கோரியுள்ளனர்.

இதையடுத்து, தமது மகன் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் எனவும், அவரை விடுவிக்க 10 இலட்சம் ரூபாவைக் கடத்தல்காரர்கள் கோருகின்றனர் எனவும் அவரின் தந்தை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அதற்கமைய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மூன்று சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களுமே எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply