அடுத்த தடவையும் ரணிலே ஜனாதிபதி – பிரசன்ன வெளிப்படைக் கருத்து

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராகக் களமிறங்குவாா் என அரசில் உள்ள பலரும் எதிர்பார்த்துள்ளனர் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

ரணில் விக்கிரமசிங்க அடுத்த தடவையும் ஜனாதிபதி பதவிக்கு வந்தால் அவருக்கு ஆதரவளிப்பதில் பிரச்சினை இல்லை.

நாட்டில் காணப்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்களின் நலன் கருதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல தீர்மானங்களை எடுத்திருந்தார். அதன் பலனாக நாடு தற்போது சுமுகமான நிலைமைக்கு மாறியுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாகக் காணப்பட்டதை விடவும் அத்தியாவசியப் பொருட்களின் விலை தற்போது குறைவடைந்துள்ளது எனத் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply